Friday, December 3, 2010

வணக்கம் வலையுலக மக்களே... என் நண்பர்கள் பலர் யாஹு மெசஞ்சரை உபயோக்கிறார்கள் ஆனாலும் அதில் யுனிகோட் தமிழில் அரட்டை அடிக்க முடியவில்லை என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.... நானும் வெகு காலமாக முயன்று பார்த்தேன் முடியவில்லை... பின் ஏதோ வலைத்தளத்தில் அது முடியும் என வாசித்தேன் முயன்றும் பார்த்தேன் சரியாக வந்தது. சரி என்று அதனை bookmark செய்தும் வைத்தேன்... பின் எனது கணனியினை format செய்யும்போது அந்த bookmarkகளை save செய்யாமல் அழித்துவிட்டேன்... பின் இன்று ஏதோ நினைவு வர திரும்பவும் அதனை முயன்று பார்த்து சரி வந்துவிட்டது.... தெரிந்ததை நான் மட்டும் வைத்திருந்தால் நல்லதல்ல என்பதால் உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்

முதலில் உங்கள் கணனியில் e-கலப்பை போன்றதொன்றை நிறுவிக்கொள்ளுங்கள்.(நான் உபயோகிப்பது e-கலப்பை. அதற்கு மட்டும்தான் சரி வருகிறதோ தெரியவில்லை அதோடு நான் எனது Operating System XP, vistaவில் வேலை செய்கிறதா என்னவோ தெரியவில்லை) e-கலப்பையை நிறுவியபின் யாஹு மசெஞ்சரில் log in ஆகி அதில் preferenceய் தெரிவு செய்யவும். இப்பொழுது உங்களுக்கு கீழே உள்ளது போன்ற ஒரு புதிய window திறக்கும்..



அதில் appearanceய் தெரிவு செய்யவும் அதில் change font & colors என்பதைத்தெரிவு செய்யவும்.... அப்பொழுது உங்களுக்கு கீழே காட்டப்பட்டிருப்பது போல் ஒரு புதிய window திறக்கும்..


அதில் fontஇல் TSCu_Paranar.ttf என்னும் fontஇனை தெரிவு செய்து okவினை கிளிக் செய்யவும்.... பின் preferanceல் okவினை கிளிக் செய்து சாதாரணமா யாஹூ மெசெஞ்சரில் அரட்டை அடிக்கும்போது யுனிகோடினை தெரிவு செய்து தமிழி டைப்பண்ணினால் கீழே உள்ளது போல் தமிழில் அழகாக வரும்



font தேவையானவர்கள் இங்கே download பண்ணிக்கொள்ளுங்கள்



PC - ஒரு பார்வை

தற்காலத்தில் PC எனப்படும் Personal Computer-ஐ உபயோக்காதவர்களே இல்லை என சொல்லுமளவுக்கு இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் ஒரு முக்கியமான பாகம் Microprocessor ஆகும். மற்றும் இதில் Memory, Hard Disk, Modem போன்றவைகளும் உள்ளன.


இந்த
PC - 1970-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதை, Mr.Ed Roberts என்பவர் Intel-இன் Microprocessor-ஐ உபயோகித்து வடிவமைத்து அதற்கு Altair 8800 என்று பெயரிட்டு $395-க்கு விற்பனை செய்துவந்தார்.

சில வருடஙகளுக்குப் பிறகு Apple நிறுவனம், Apple II கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தபின் கம்ப்யூட்டரின் வளர்ச்சி அபரிமிதமாகையது.பிறகு, Commodore, Atari மற்றும் Texas Instruments கம்ப்யூட்டர் தயரிப்பில் ஈடுபட்டாலும், IBM, Apple நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் பின்வாங்கின.

ஆரம்பத்தில் மிகப்பெரியதாய் இருந்த இந்த PC தற்காலத்தில் உள்ளங்கை அளவிற்கு வந்துவிட்டது, இருந்தாலும், அடிப்படை தத்துவம் ஒன்றுதான்.


இப்போது, PC-இன் பல்வேறு பாகங்களைப் பார்ப்போம்,



Central Processing Unit (CPU) - இதை கம்ப்யூட்டரின் மூளை என்று சொன்னால் அது மிகையாகாது, இது Assembly Language-ஐ கொண்டு இயங்குகிறது, ஒரு கம்ப்யூட்டரின் அனைத்து செயல்களையும் இதுவே தீர்மானிக்கிறது.


Memory - இதில் இரண்டு வகைகள் உள்ளன, அவை :


Random Access Memory (RAM) - இது ஒரு தற்காலிக Memory ஆகும். ஒரு கம்ப்யூட்டர் இயங்கும்போது, அதன் தகவல்களை தற்காலிகமாக சேமிக்க இது பயன்படுகிறது.

Read Only Memory (ROM) - இது ஒரு நிரந்தரவகை Memory ஆகும். கம்ப்யூட்டரின்
முக்கியமான தகவல்களை நிரந்தரமாக சேமிக்க இது பயன்படுகிறது.


Hard Disk - இதுவும் ஒரு நிரந்தரவகை Memory ஆகும், கம்ப்யூட்டரின் Operating System எனப்படும் இயங்குதளம் இதில்தான் நிறுவப்படுகிறது. இதைப்பற்றிய விளக்கமான பதிவு ஏற்கனவே இந்த வலைதளத்தில் உள்ளது.


Modem - இது உங்கள் கம்ப்யூட்டரை Internet - உடன் இணைக்கப்பயன்படுகிறது.


Sound Card - இது உங்கள் கம்ப்யூட்டரில் இசையை கேட்கபயன்படுகிறது, இதனுடன் Speaker - ஐ இணைத்து பயன்படுத்தவேண்டும்.




Motherboard - இது ஒரு கம்ப்யூட்டரின் மிக மிக்கியமான பாகம் ஆகும், இதில்தான் மேலேசொல்லப்பட்ட CPU, Memory மற்றும் பிற பாகங்களான Hard Disk, Power Supply, Sound Card போன்றவை இணைக்கப்படுகின்றன.



இதைத்தவிர, Motherboard-இல் LAN Port, USB Port, Parallel Port, IDE Connector, SATA Connector போன்றவைகள் உள்ளன.

அடுத்த பதிவில் நாம் கம்ப்யூட்டர் எவ்வாறு இயங்குகிறது என்று பார்ப்போம்.


PC - ஒரு பார்வை - தொடர்ச்சி...


சென்ற பதிவில் நாம் கம்ப்யூட்டரின் பாகஙகளை பற்றி பார்த்தோம், இப்பொது அது எவ்வாறு இயங்குகிறது என்று பார்ப்போம்;


கம்ப்யூட்டரின் அனைத்து Hardware பற்றிய விவரங்களும் அதன் BIOS (Basic Input / Output System) எனப்படும் அதன் Memory-இல் பதிவாகி இருக்கும். நாம் கம்ப்யூட்டரை ON செய்யும்போது BIOS ஆனது அனைத்து Hardware-களும் ஒழுங்காக இணைக்கப்பட்டுள்ளனவா என்று சோதித்து பார்த்து பின்னரே Booting-க்கு அனுமதிக்கும். இதை Power On Self Test (POST) என அழைப்பர்.

இந்த BIOS Settings ஒரு சிறிய மின்கலம் (Battery, 3V) மூலம் எப்பொதும் இயங்கிகொண்டே இருக்கும், இதனால் Date, Time போன்றவைகளை ஒருமுறை Set செய்துவிட்டாலே போதும், கம்ப்யூட்டர் Boot ஆனவுடன் Date, Time போன்றவைகளை தானாகவே எடுத்துக்கொள்ளும். மின்கலம் தன் சக்தியை இழந்துவிட்டால், Boot ஆகும்பொது Error Message திரையில் தெரியும், கம்ப்யூட்டர் Boot ஆனவுடன் Date, Time போன்றவைகளை ஒவ்வருமுறையும் Set செய்யவேண்டியது வரும், இதற்கு மின்கலத்தை மற்றுவதே ஒரே வழி.

இந்த BIOS Settings - ஐ பார்க்க, F2 அல்லது Del Key-களை Press செய்து Setup Program Screen - க்குள் செல்லாலாம், நமக்கு தேவையானவைகளை மாற்றி பின் அதை Save செய்யலாம். அதில் உள்ள Quick Boot Option-ஐ Enable செய்தால் POST எனப்படும் Initial Checking Screen-ஐ விரைவாக கடக்கலாம், இதனால் Booting Time குறையும்.


பொதுவாக, Booting இரண்டு வகைப்படும், அவை Cold Boot மற்றும் Reboot.

Cold Boot - கம்ப்யூட்டரின் மொத்த இயக்கத்தையும் நிருத்தி பின் ON செய்வது
Reboot - Ctrl + Alt + Del Command அல்லது, Windows-இல் Restart Option Use
செய்து கம்ப்யூட்டரை Boot செய்வது.

BIOS-ஆனது, System Boot - ஆகும்போது அது எந்த வகையான Boot என்று கீழ்கண்ட வகையில் சோதித்து பார்க்கும், அதன் Memory Address 0000:0472 - இல் 1234h என விடை கிடைத்தால் அது Reboot என முடிவெடுத்து POST-ஐ Skip செய்து விரைவாக Boot ஆகும். இல்லையென்றால் அது கம்ப்யூட்டரின் அனைத்து பாகங்களும் ஒழுங்காக இணைக்கப்பட்டுள்ளனவா என சோதித்து பின்னர் Boot ஆகும். கம்ப்யூட்டர் Cold Boot ஆகும்போது கீழ்கண்டவற்றின் விபரங்களை திரையில் பார்க்கலாம்,

Processor
Memory
Bios Version
Hard Disk
Floppy Drive
CD/DVD Drive



இவற்றில் ஏதேனும் குறைபாடு இருந்தாலோ அல்லது சரியாக இணைக்கப்படவில்லை- யென்றாலோ திரையில் Error Message தெரியும், பின் F1 Key Press செய்தோ அல்லது குறையை சரிசெய்த பின்னரே Boot செய்யமுடியும். இந்த BIOS Setup-க்கு Complementary Metal-Oxide Semiconductor (CMOS) Setup என்று பெயர். இந்த செயலுக்கு Boot Sequence என்று பெயர்.



இந்த Boot Sequence முடிந்தவுடன் Primary Hard Disk மூலமாகவோ அல்லது BIOS-இல் குறித்துள்ள Booting Order படியோ கம்ப்யூட்டர் Boot ஆகும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டர் இயங்க ஒரு இயங்குதளம் (Operating System) வேண்டும், அந்த இயங்குதளம் Windows XP ஆகவோ Linux ஆகவோ இருக்கலாம். Excel, Word, PowerPoint மற்றும் பல Software-கள் இயங்குதளதில் இயங்கும் Applications ஆகும்.

இயங்குதளத்தைப் பொறுத்து கம்ப்யூட்டரின் Performance வேறுபடும்.

Hard Disk - ஒரு விளக்கம்


Hard Disk இல்லாத கணிணியை நினைத்து பார்க்க முடியுமா நம்மால் ?


இந்த
Hard Disk 1950 - ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. துவக்கத்தில் இந்த Hard Disk 20 இஞ்சு விட்டமும் மிக சிறிய கொள்ளளவும் கொண்டதாக இருந்தது. இது முதலில் "Fixed Disk" மற்றும் "Winchesters" எனவும் பின்னர் "Floppy Disk" கண்டுபிடிக்கப்பட்டவுடன் "Hard Disk" எனவும்அழைக்கப்பட்டது.

தற்போதைய நவீன கணிணிகளில் குறைந்தபட்சம் 40 GB மற்றும் அதிகபட்சம் 250 GB கொள்ளளவு கொண்ட Hard Disk உபயோகிக்கப்படுகின்றது. எல்லா தகவல்களும், உதாரணமாக : Database / Image Files எதுவாக இருந்தாலும் அவைகள் "Files" - களாக சேமிக்கப்படுகின்றன. அவை சம்பந்தப்பட்ட சாப்ட்வேர் Program இயங்கும்போது Hard Disk தேவையான File-ஐ Retrieve செய்து கொடுக்கிறது.

கீழண்ட இரண்டு வகையான முறையில்
Hard Disk- இன் Performance-ஐ அளக்கலாம்.

Data Rate - இந்த முறையில் Hard Disk ஒரு நொடியில் எத்தனை Bytes-ஐ CPU - க்கு அனுப்புகிறது என்று கணக்கிட்டு அதன் அடிப்படையில் வ்ண்தட்டின் Performance சோதிக்கப்படுகிறது, பொதுவாக இந்த Data Rate ஒரு நொடிக்கு 5 Mb - 40 Mb வரை இருக்கும்.

Seek Time - சம்பந்தப்பட்ட சாப்ட்வேர் Program இயங்கும்போது Hard Disk தேவையான File-ஐ Retrieve செய்து கொடுக்கிறது என்று பார்த்தோம் இல்லையா ? அவ்வாறு கொடுக்கும் கால அளவுSeek Time என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த Seek Time ஒரு நொடிக்கு 10 - 20 Milliseconds வரை இருக்கும்.

ஒரு
Hard Disk- ஐ திறந்து பார்த்தால் அது எப்படி வேலை செய்கிறது மற்றும்அதன் உள்ளே என்ன பாகங்கள் உள்ளன என்று தெரியவரும்.

கீழே உள்ளது ஒரு
Hard Disk - இன் படம்.
கீழே உள்ளது ஒரு திறந்த Hard Disk - இன் முன்பக்க மற்றும் பின்பக்க தோற்றம் :

மேற்கண்ட படத்தில்,

Plotters -
இது பொதுவாக ஒரு நிமிடத்திற்கு 3600, 4200, 5400 மற்றும் 7200 தடவை சுழலும்தன்மை கொண்டது. இடையே RPM என்று அழைக்கிறார்கள், இதை வைத்தே வண்தட்டின் வேகம்கணக்கிடப்படுகிறது, Hard Disk - இன் கொள்ளளவை கூட்டவும் இந்த Plotters பயன்படுகிறது. தகவல்கள் இந்த Plotters - இன் மேற்பரப்பில் Sectors and Tracks - இல் சேமிக்கப்படுகின்றன.

Arms - இந்த பாகம்தான் Read / Write Head-ஐ கையாளுகின்றது, இதன் அமைப்பு எளிமையாகவும் மற்றும் வேகமாக இயங்குகின்ற வகையிலும் (50 முறை முன்னும் பின்னும்) ஒரு சிறிய அதிவேக மோட்டாருடன் உடன் இணைந்துள்ளது.

இதைத்தவிர, மற்றும் பல பாகங்கள் மேலே உள்ள படத்தில் குறியிட்டு காட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒருங்கினைந்துதான் ஒரு வண்தட்டு இயங்குகிறது.

என்னுடைய அடுத்த பதிவில்
Hard Disk - ஐ பற்றிய மேலும் பல தகவல்களை அளிக்கின்றேன்.

WiFi



WiFi - உங்களுக்காக...


தற்காலத்தில் Wireless Network மிகவும் பிரபலமடைந்து வருகிறது, Laptops, PDA Phone போன்றவற்றிலும், அலுவலகங்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. பழைய முறையான Wired Network-கை காட்டிலும் இது சுலபமான முறையாகும். Installation and Configuration போன்றவை மிகவும் சுலபமாக செய்யலாம்.

இந்த
Wireless Network - WiFi அல்லது 802.11 Network என அழைக்கப்படுகிறது. கீழ்கண்ட படம் ஒரு WiFi Network - ஐ விளக்குகிறது,


Wireless Network-ஆனது, TV, Radio மற்றும் Cell Phones போல Radio Waves எனப்படும் ரேடியோ அலைகளை பயன்படுத்தி வேலை செய்கிறது. இதை தொழில்நுட்ப சொல்லில்
Two Way Radio Communication என அழைக்கலாம்.
இதன் தகவல் எல்லை 100 Meters வரை இருக்கும்.

ஒரு கம்ப்யூட்டரில் உள்ள Wireless Network Adapter அருகில் உள்ள Wireless Access Point- உடன் எப்பொதும் தொடர்பில் இருக்கும், அது Computer Signal-களை Radio அலைகளாக மாற்றி (coding) தன்னிடமுள்ள Antenna மூலமாக Wireless
Access Point அல்லது Router-க்கு அனுப்பி வைக்கிறது, பின்னர் Router ஆனது அதை திரும்பவும் Computer Signal-ஆக மாற்றி (Decoding) பின் internet-உடன் தொடர்பு கொள்கிறது. அதேபோல், Internet- இல் இருந்து தகவல்களை பெற்றபின் அதைRadio அலைகளாக மாற்றி (coding) தன்னிடமுள்ள Antenna மூலமாக கம்ப்யூட்டரின் Wireless Network Adapter-க்கு அனுப்பிவைக்கிறது. Wireless Network Adapter ஆனது அதை திரும்பவும்Computer Signal-ஆக மாற்றி (Decoding) திரையில் நமக்கு காண்பிக்கப்படுகிறது.

இந்த Radio Signal, மற்ற
Radio Signal-களைவிட முற்றிலும் வேறுபட்டது, இதன் அலைவரிசை 2.4 GHz - 5 GHz ஆகும், இது மற்றவற்றைவிட கூடுதல் ஆகும், இந்த கூடுதல் அலைவரிசை அதிகபடியான தகவல்களை Transmit செய்ய உதவுகிறது. கீழ்கண்டவை 802.11 Network Standard-ன் வகைகள் ஆகும் ;

802.11a - இதன் அலைவரிசை 5 GHz வரை, வினாடிக்கு
54 Mbps வரை தகவல் பரிமாற்றம்
செய்யும் திறன் வாய்ந்தது. இது
orthogonal frequency-division multiplexing
(OFDM) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Radio Signal-களை பல Sub-Signal-களாக
பிரித்து கையாளுவதால் தகவல் இழப்பின்றியும் நல்ல வேகத்துடனும் இயங்குகிறது.

802.11b - இதன் அலைவரிசை 2.4 GHz வரை, வினாடிக்கு 11 Mbps வரை மட்டுமே தகவல்
பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது
, இது complementary code keying
(CCK)
modulation என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

802.11g - இதன் அலைவரிசை 2.4 GHz வரை, ஆனால் வினாடிக்கு 54 Mbps வரை தகவல்
பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது
, இதுவும் orthogonal frequency-division
multiplexing
(OFDM) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.


802.11n - இதுவும் 802.11g Network போலேதான், ஆனால் இதன் வேகம் 802.11g - ஐ விட மூன்று
மடங்கு அதிகம், தோராயமாக
140 Mbps. இது Multiple Input, Multiple Output
(MIMO)
என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.

பொதுவாக நாம் பயன்படுத்தும் Wireless Network - க்கு ஒரு பெயர் உண்டு, அதை - SSID (service set identifier ) எனபர். பொதுவாக இது Wireless Router - இன் தயாரிப்பாளரின் பெயரிலேயே இருக்கும், வேண்டுமானால் இதை நாம் மாற்றி கொள்ளலாம். ஒவ்வரு Wireless Router-க்கும் ஒரு Channel இருக்கும், இந்த Channel - ன் அடிபடையிலேயே தகவல் பறிமாற்றம் நடைபெறும். ஒருவேளை நாம் இரண்டு Wireless Router-களை பயன்படுத்தினால் இரண்டிற்கும் வேறு வேறு Channel-களை பயன்படுத்தவேண்டும், இல்லையென்றால் தகவல் பறிமாற்றத்தில் சில குறைபடுகள் ஏற்படும்.

மற்றும், நம்முடைய
Wireless Router - களை Secure Mode - லேயே Configure செய்து வைக்கவேண்டும், இல்லையென்றால் வெளியார்கள் நம்முடைய Network-ஐ தவறாக உபயோகிக்கக்கூடும்.

WiFi Protected Access - WPA, Wired Equivalency Privacy - WEP போன்றவை Wireless Security - ன் சில வகைகள் ஆகும்.

Tuesday, November 23, 2010

ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..

ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..!


ஒட்டகத்தைப்பற்றி ஓரளவுகூட அறியாத ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட தவறான உவமானம்தான் ‘பாலைவனக்கப்பல்’.


ஏனென்றால், " 'சஃபீனத்-அஸ்-ஸஹாரா ' என்று எந்த பண்டைய அரபி இலக்கியங்களிலாவது எழுதப்பட்டு இருக்கிறதா?" என்றால்... அரபிகள்முழிக்கிறார்கள். ஏதோ சில ஆங்கில அறிவு பெற்றவர்களுக்கு மட்டும் ‘தெ ஷிப் ஆப் தெ டெசெர்ட்’ என்றால் தெரிந்திருக்கிறது. அநேகமாய், தங்கள் மகத்தான கண்டுபிடிப்பான ‘கப்பலில்’, மத்தியதரைக்கடலை கடந்து வடக்கு ஆப்பிரிக்காவில் கால்வைத்த ஐரோப்பியர்கள், ஒட்டகத்தையும் பாலைவனத்தையும் முதன்முதலாக பார்த்துவிட்டு.. ‘கடலுக்கு கப்பல்பிரயாணம் - பாலைக்கு ஒட்டகபிரயாணம்’ என்று மட்டுமே உணர்ந்து சொன்ன வாக்கியமாக இருக்கலாம்.

மழை, புயல், காட்டாற்று வெள்ளம், சூறாவளி, பனிப்பாறை, மணல்திட்டு, அடித்தள ஓட்டை, சுனாமி போன்ற எந்த ஒரு இயற்கைச்சீற்றத்துக்கும் திடீர் ஆபத்துக்கும் ஈடு கொடுக்க முடியாமல் இரண்டாக உடைந்து தலை குப்புறக்கவிழ்ந்து மூழ்கும் கப்பல் என்ற மனிதனால் கட்டப்பட்ட ஓர் உயிரற்ற வஸ்து என்பது...., கடும் குளிர், கடும் வெப்பம், கொதிக்கும் மணல், புழுதிக்காற்று, புல்பூண்டு & தண்ணீர் அற்ற வறட்சியில் மாதக்கணக்கில் பிரயாணம் என்று அனைத்து இயற்கை தாக்குதல்களையும் சளைக்காமல் வெற்றிகரமாய் எதிர்கொண்டு பீடுநடைபோடும் இறைவனின் நுண்ணிய படைப்பான ஒட்டகத்துக்கு.... எப்படி ஒப்பாகும்?

(ஓர் அன்பு வேண்டுகோள் : பதிவு நீ.....ளமாகிவிட்ட காரணத்தினால், ஒவ்வொரு முறையும் ‘ ..! ’ போட்ட இடங்களுக்கு அடுத்து ‘சுபஹானல்லாஹ்’சொல்லிக்கொள்ளுங்கள்.)

நிச்சயமாக பாலைவனத்தில், தனிச்சிறப்பு வாய்ந்த தனக்கு ஒப்புமை அற்ற ஒட்டகமானது, பொதுவாக தாவர உண்ணி வகையைச்சேர்ந்த பாலூட்டி பிரிவைச்சார்ந்த ஒரு வீட்டுவிலங்கு. 250 லிருந்து 680 கிலோ எடை வரை வளரும்இவை, பொதுவாக 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன..! ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல்... உணவில்லாமல்... பாலைவனத்தில் பலநாள் வாழக்கூடியது, அதுவும் மாமூலாக செய்யக்கூடிய அனைத்துவேலைகளையும் செய்து கொண்டே..!

எப்படியென்றால், சூரியனின் வெப்பம் கொளுத்தும் கோடையில், கொதிக்கும் மணலில் 50° செல்சியஸ் வெப்பத்தில் உணவின்றி நீரின்றி 8 நாட்கள் வரை... தன் எடையில் 22% இழந்தபின்னும் உயிர் வாழும்..! இதை ஒரு மனிதன் முயற்சித்தால், அவன் தன் உடலில் 8% எடையை எட்டாவது நாள் இழக்க வேண்டிவரும். ஆனால், அதற்கு முன்னரே 36-வது மணிநேரத்திலேயே அவன் இறந்திருப்பான். காரணத்தை போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லும் :- ‘அவன் உடம்பில் 88% நீர்ச்சத்துதான் இருந்தது’ என்று..! ஏனென்றால், அநேக பாலூட்டிகள் தன் உடம்பில் 12%நீர்ச்சத்தை இழந்தாலே இறந்துவிடும். ஆனால், ஒட்டகமா,அப்போது தன் உடலில் உள்ள நீர்ச்சத்தில் 40%-ஐ இழந்தும்உயிர்வாழ்கும்..! இதல்லாம் கோடை காலத்திற்கு சொன்னதுதான். கடும் குளிர் காலத்திலோ ஆறுமாதம் வரை கூட ஒட்டகம் இப்படி நீரின்றி உணவின்றி உயிர்வாழும்..! அதேநேரம், அப்போது, மேய்வதற்குப் புல் போன்ற சிறிது உணவு கிடைத்தால் கூட போதும், அடுத்த 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது..! இடையில் சிறிது தண்ணீர் கிடைத்து விட்டால்... கேட்கவே வேண்டாம்... அந்த கால அளவு இன்னும் பலமடங்கு எகிறும்..!


சிலமாதம் நீர் அருந்தாமல் இருந்த உலர் நிலையில் இருந்து மீண்டு நீர் அருந்தும்பொழுது தன் உடலில் மூன்றில் ஒரு பங்கு எடை அளவிற்கு நீரை 10நிமிடத்தில் குடித்துவிடும்..! (அதாவது450 கிலோ எடைகொண்ட ஓர் ஒட்டகம்150 லிட்டர் தண்ணீரை பத்து நிமிடத்தில் குடித்துவிடும்..!) அப்படி நீர் அருந்தியவுடன் 10 நிமிடங்களில் உடலில் நீர்ச்சத்து ஏறிவிடும்..! அதன்இரப்பையில் உள்ள நீர் அறைகளில் நீரை தற்காலிகமாகஏற்றிக் கொள்கிறது..! அங்கிருந்து உறிஞ்சப்பட்டு இரத்தத்தின்சிகப்பு அனுக்களில் ஏற்றி சேமித்துக் கொள்கிறது..! அப்போது அச்சிவப்பணுக்கள் அதன் உண்மையான அளவை விட 240%விரிந்து இடமளிக்கிறது..! பிற விலங்குகளில் நீரற்ற உலர் நிலையில் இருந்து இவ்வளவு விரைவாக நீரை இரத்தத்தால் உறிஞ்சிக்கொள்ள முடியாது. ஏனெனில் இரத்தத்தில் திடீர் என்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் சிவப்பணுக்கள்,வெடித்துவிடும். ஆனால் ஒட்டகத்தின் சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் 240% அளவு விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதால், இவ்வாறு நிகழ்வதில்லை..!
மனிதன் உட்பட எந்த ஒரு விலங்கும் அப்போதையை நிலையில் தேவைக்கு அதிகமாக இவ்வளவு தண்ணீர் குடித்தபின் தேவையற்ற அனைத்தையும் சிறுநீராகவே வெளியேற்றிக்கொண்டு இருக்கும். ஆனால், ஒட்டகமோ...தன்னுடைய சிறுநீரையும் குறைத்துக்கொள்ளும்..!ஒட்டகத்திற்கு இருப்பது போல் சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது..! நம்முடைய சிறுநீரில் அதிகபட்சமாக தாது கழிவுகள் 8 சதமும் 92 சதம் நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறு நீரில் 40சதத்திற்கும் அதிகமான கழிவுகளும், குறைவான நீரும் இருக்கும் அந்த அளவிற்கு குறைவான நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சத்தி வாய்ந்தது அதன் சிறுநீரகம்..! நம்முடை கிட்னியாக இருந்தால் எப்போதோ செயலிழந்திருக்கும். அதுமட்டுமில்லை, இரத்தத்தில் யூரியா அளவு அதிகரித்து இறந்து விடுவோம். ஆனால், ஒட்டகம் மட்டும் எப்படி அதிக யூரியாவினால் பாதிப்படையவில்லை என்றால், அதன் ‘விசேஷ லிவர்’ ஆனது யூரியாவை மட்டும் இரத்தத்தில் இருந்து தனியே பிரித்து எடுத்து அதை புரோட்டீனாகவும் தண்ணீராகவும் மாற்றி விடுகிறது..!

ஒட்டகத்தின் சாணத்தை அது போட்ட ஒரு சில மணி நேரத்தில் எரிபொருளாக பயன்படுத்தி விடலாம், என்ற அளவிற்கு உலர்ந்த நிலையில் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது..! பசு... சிறுநீர்/சாணம் வழியாக 20 லிட்டர் நீரை ஒரு நாளைக்கு வெளியேற்றுகிறது. ஆனால் ஒட்டகம் 1 லிட்டர் நீரை கூட இழப்பதில்லை..! அவை அனைத்தையும் ஒட்டக பாலாக மனிதன் கறந்து கொள்ளலாம். கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு பத்து பசுமாடு கொடுக்கும் பாலை ஒரு ஒட்டகம் கொடுக்கிறது..! பசுவின் உடல் சூடு ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி விட்டால் பால் சுரப்பு நின்று விடும். ஆகவே அதை கொட்டகையில் நிழலில் வைத்து அதன் மேல் நீரை ஊற்றியோ, அல்லது ஏ/சி செய்யப்பட்ட ‘குளுகுளு’ இடத்தில் வைத்தோ பராமரிக்க வேண்டும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. பலநாட்கள் வெயிலிலேயே நின்றாலும் கூட பால் கொடுக்கும்..! பசுவிற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒன்று பால் நின்றுவிடும் அல்லது பாலில் கொழுப்பு 30% அதிகரித்து, பால் குடிக்க முடியாத நிலைமைக்கு மாறிவிடும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. கடுமையான கோடையில் கூட குறைந்த அளவு நீரை குடித்துவிட்டு தன் குட்டிக்கும் பாலை கொடுத்துவிட்டு 15லிருந்து 20 லிட்டர்வரை நமக்கும் பால் கொடுக்கும்..! மேலும் பத்து நாட்கள் வரை நீர் கிடைக்காவிட்டால் கூட அதே தரத்தில் அதே அளவு பாலை கொடுக்கும்..! ஒட்டகப் பாலில் பசும்பாலை விட மூன்று மடங்கு வைட்டமின்Cஅதிகம் உள்ளது..! இது காய்கறிகள், பழங்கள் போன்றவை அரிதாக கிடைக்கும் பாலைவன மக்களுக்கு மிக்க அவசியமான உணவு..!

சரி... பாலைவனத்தின் கடும் குளிரையும் கடும் கோடை வெப்பத்தையும் ஒட்டகம் எப்படி தாங்குகிறது?.

ஒட்டகத்தின் ரோமமும், தோலும்அப்படி ஒரு தடிமனானது மட்டுமின்றி அதற்கு சிறந்த வெப்ப தடுப்பானாக பயன்படுகிறது..! அது மட்டுமல்ல. கடும் குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்பநிலையை 34°C லிருந்து 41.7°C வரை (93°F-107°F.)சுயமாக மாற்றிக்கொள்ளும்..! இப்படி தன் உடல் வெப்பத்தை அதுவாகவே குளிரில் 34° செல்சியஸ் வரை குறைத்துக்கொள்வதால், வெளியில் உறைபனி நிலையில் கடுங்குளிர் காற்று அடித்தாலும் தாக்குப்பிடிக்கிறது..! அதேநேரம், கடும் கோடை வெப்பக்காலங்களில் வெளியில் 55° செல்சியஸ் என்று கொளுத்தும்போது, வெப்பம்கடத்தா தன் தடிமனான தோலினாலும், தன் உடல்வெப்பநிலையை 41° செல்சியஸ் வரை கூட்டிக்கொண்டும், தன் உடல் வியர்வையை வெளியிடாமலேயே கடும் வெப்பத்திலும் தாக்குப்பிடிக்கிறது..! இதனால் உடல்நீர் வியர்வை மூலம் விரயமாவதும்தடுக்கப்படுகின்றது..! இந்நிலையிலேயே, ஒட்டகம் ஒன்று ஏறத்தாழ 200 கிலோ கிராம் எடையைச் சுமந்துகொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு நடக்கவும் செய்யும்..! சிறுதொலைவு ஓட்டப்பந்தயம் வைத்தால் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடவும் செய்யும்..!

நம்முடைய மூச்சை ஒரு கண்ணாடியின் மேல் விட்டுவிட்டு கண்ணாடியை நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம். நாம்1-லிட்டர் காற்றை சுவாசித்து வெளியேற்றினோம் என்றால் 16மில்லி கிராம் நீரை இழந்திருப்போம். கடும் வெப்பக்காற்றை சுவாசிக்கும் ஒட்டகம் அக்காற்றை ஈரப்படுத்துகிறது..! ஆனால், அதேநேரம், ஒட்டகத்தின் வெளிவிடும் மூச்சில் ஈரம் மனிதனைவிட பல மடங்கு குறைவாக இருக்கும்..! ஏனென்றால் மற்ற எதற்குமில்லாத விசேட மூக்கமைப்பு தான் இதன் காரணம்..! அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தில்,மூன்றில் இரண்டு பகுதியை வெளியேறி விடாமல் தடுத்து விடுகிறது..! மேலும், பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை கூட மோப்ப சத்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு..!

ஒட்டகத்தின் பாத அமைப்பு வித்தியாசமானது..! வெடித்த இருகுளம்புகளையும் சேர்த்து மிக அகன்ற வட்ட வடிவினாலான தட்டையான பாதத்தை கொண்டது. முன்புறம் அதன் இரு குளம்புகளும் விரிந்து கொள்ளும் காரணத்தால் 500கிலோ வரை எடையுள்ள ஒட்டகம் 450 கிலோ வரை சுமையை சுமந்து கொண்டு மணலில் கால்கள் புதைந்து விடாமல் நிலைதடுமாறி கீழே விழுந்துவிடாமல் கொதிக்கும் மணலிலும் ஓட முடிகிறது..! அப்போது, அதன் பாத குளம்புத்தோல் மிகத்தடிமனானதால் கடும் வெப்பத்தினாலும் பாதிக்கப்படாது..!


மனிதர்கள் விலங்குகள் ஆகிய அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகளை மட்டுமே பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்றுமடக்கும்இணைப்புகள் இருக்கும்..! அதனால் தான் ஒட்டகத்தால் எளிதாக பாலைவன மணலின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்க முடிகிறது..! மனிதர்கள் அதன்மீது ஏறி இறங்க விரும்பினால், உடன் எவ்வளவு சூடாக கொதிக்கும் மணலிலும் உடனே முட்டிபோட்டு மண்டி இடும்..! அப்படி மண்டி இடும்போது அதன் முட்டுக்காலிலும், கால் குளம்புத்தொளைப்போன்றே தடிமனான வெப்பத்தினால் பாதிக்கபடாத தோல் அங்கும் அமைந்துள்ளது..! ஒட்டகத்தின் கால்கள் நல்ல உயரமானதாக இருப்பது ஏனென்றால், கடும் கோடையில் பாலைவனத்தில் ஒட்டகம் நடக்கும்போது கொதிக்கும் மணலின் அனல் உக்கிரம் அதன் வயிற்றுப்பகுதி உடம்பில் தாக்காமல் இருக்கத்தான்..! மேலும் உயரமான கால்கள் அதிக எடை சுமக்கவும் அவசியமாகிறது..!


அடுத்து பாலைவனம் என்றாலே புழுதிக்காற்று... மணற்புயல்... பிரசித்தம். அப்படி, மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது ஒட்டகம் (நாம் நம் வீட்டு ஜன்னலை மூடுவது போல்) மூக்கை மூடிக்கொள்ளும்..!தன் ‘கை’யால் இல்லைங்க.. தன் மூக்காலேயே..! அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள்மணலோ தூசியோ காதுகளுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது..! அதன் இரண்டடுக்கு கண் இமையில் உள்ள நீண்ட சீப்பு போன்ற தடித்த நெருக்கமான முடிகள் ஒன்றன் உள் ஒன்றாக கோர்த்துக்கொண்டுமணற்புயலிலிருந்து கண்ணிற்கு முழுப்பாதுகாப்பு அளிக்கிறது..! கண்களுக்கு கீழே உள்ள இமை போன்ற திரை அமைப்பு வாகனத்தின் வைப்பர் போல செயல்பட்டு கண் பரப்பை சுத்தப்படுத்தி கூடுதலாய் கண்களுக்கு பாதுக்காப்பை அளிக்கிறது..! கண்ணிலும் அதன் கண்ணிற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பும், புருவமும் பாலைவனத்து சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்களைதாக்கி விடாமல் வெளிச்சத்தை பாதியாக தடுத்து விடுகிறது..! அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்து இருப்பதால் தலையை திருப்பாமல் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்..! பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்து விடாமல் இருப்பதாற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்..!

பாலைவனம் என்றாலே சப்பாத்திக்கள்ளி, கற்றாழை போன்ற முட்செடிகள் தான் அதிகமாக கிடைக்கும. அதை மேய்வதற்காக அழுத்தமான ரப்பர் போன்ற உதடுகள் கொண்டது ஒட்டகம்..! அதன் உதட்டில் குத்தும் முட்களே உடைந்து விடும் அளவுக்கு தடிமனானது அதன் உதடு..!அந்த விசேஷ உதட்டமைப்பு நாக்கை நீட்டாமல் மேய உதவுகிறது..! புழுதிக்காற்றில் கண்ணைமூடிக்கொண்டு சகட்டுமேனிக்கு பிளாஸ்டிக், தகரம், ஒயர், மண்ணாங்கட்டி என்று கண்டதையும் திண்ணும்..! அதையெல்லாம் தனித்தனியே பிரித்து செரிக்கும் வேலையை அதன் நான்கு அரை கொண்ட விசேஷ இரைப்பை பார்த்துக்கொள்கிறது..! அவசரமாக சாப்பிட்டதை ஆரஅமர நிதானமாய் மீண்டும் வாய்க்கு கொண்டுவந்து அசைபோட்டு உள்ளே தள்ளும்..!

மேலும், இந்த அதிசயப் பிராணி உணவும், நீரும் கிடைக்கும் பொழுது அவை தேவைக்கதிகமாகஉண்ணப்பட்டு கொழுப்பாக மாற்றப்பட்டு அதன் முதுகில் திமில் அல்லது திமில்களாக சேமித்துக்கொள்கிறது..! சுமார் 45கிலோ எடை இருக்கும் அந்த திமிலில் அதிகமாக கொழுப்பு இருக்கும்..! உணவோ, நீரோ கிடைக்காத காலத்தில் அதன் திமிலின் கொழுப்பில் உள்ள ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும், உணவாகவும் அவ்வப்போது தேவைக்கேற்ப ஆக்சிகரணம் செய்து மாற்றிக் கொள்கிறது..! ஒரு திமில் அல்லது இரு திமில் கொண்ட இருவகையான ஒட்டகங்கள் உள்ளன..! அவற்றில் இரு திமில் ஒட்டகங்கள் அதிக சக்தி பெற்றவை என்று தனியாகவேறு சொல்ல வேண்டுமா?

“அதிலிருந்து இது தோன்றியது, இதிலிருந்து அது தோன்றியது” என்று மற்ற மிருகங்களைப் பற்றியெல்லாம் ஏதாவது ஒரு காமடி விளக்கமாவது கொடுக்கும் 'பரிணாம உலகம்', 'ஒட்டகம் எந்த மிருகத்திலிருந்து பரிணாமம் பெற்றது' என்று கதை புனையவோ அல்லது புனைவை கதைக்கவோ இல்லையே, ஏன்?

இறைவனின் படைப்பாற்றலை புரிந்துகொள்ள இந்த ஒட்டகம் ஒன்று போதவில்லையா?
மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு நாளைக்கு சுமார்50 கீ.மீ பயணம் செய்யும் ஒட்டகம்..., நீரும், உணவும், நல்ல சீதொஷ்ணமும் தாரளமாக கிடைக்கும் ஐரோப்பாவைநோக்கியோ, தெற்கு ஆப்ரிக்காவை நோக்கியோமுறையே, அரேபிய பாலைவனத்திலும், சஹாரா பாலைவனத்திலும் முட்டாள் ஒட்டகம் எப்போதோஓடிபோயிருக்கலாமே..! இப்படி பாலைவனத்தில் கஷ்டப்பட வேண்டிய அவசியம் என்ன? இதை சிந்தித்தாலாவது, 'இது பாலைவாழ் மக்களுக்கு என்றே பிரத்தியேகமாய் இறைவன் படைத்து அளித்த அருட்கொடை' என்று உணரமுடியும்..!

அதனால்தான் இப்படி ஓர் அதிசய மிருகத்தை மானிடருக்கு படைத்தளித்த அல்லாஹ், முஹம்மத் நபி(ஸல்...) அவர்களிடம் இறை நிராகரிப்பாளர்களை சுட்டிகாட்டி தன் திருமறை குர்ஆனில்...

(நபியே) ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் பார்க்கவேண்டாமா?" (88:17) என்றுகேட்கிறான்.

சகோதரர்களே...! எது அறிவுப்பூர்வமானது என்று உங்கள்அறிவை கேட்டுப்பாருங்கள். இறை மறுப்பாளர்களின்போலி வார்த்தைகள் பொலபொலத்து உதிர்ந்து விழுவதைஎளிதில் உணராலாம்.


(சவூதி சென்றபின்னர்தான் நேரில் ஒட்டகத்தை கவனித்தேன். நேரில் கவனிக்க இயலாதவர்களுக்காக சில படங்களை இணைத்துள்ளேன்.)